ஓபன் ஏஐ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் சாட் ஜிபிடி ஆகும். உலக அளவில் இதற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சாட் ஜிபிடி சேவைகளை பெறுவதற்கு உள்நுழைய தேவையில்லை; கணக்கு தொடங்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாட் ஜி பி டி யின் திறனை மதிப்பிடுவதற்கு ஆர்வமாக உள்ள அனைவருக்கும் அதன் சேவைகளை கொடுக்கும் நோக்கில் உள் நுழைவதற்கு கணக்குத் தேவையில்லை என்ற அறிவிப்பை ஓபன் ஏஐ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தனிப்பட்ட ஓபன் ஏஐ கணக்கு இல்லாமல், சாட் ஜிபிடி பயன்படுத்துவோருக்கு முறையான பாதுகாப்பு அம்சங்களை அளிப்பதாக ஓபன் ஏஐ நிறுவனம் உறுதி அளித்துள்ளது. முன்னதாக, “மனித குலத்தின் மேம்பாட்டுக்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வழங்குவதற்காக ஓபன் ஏஐ தொடங்கப்பட்டது. ஆனால், இந்தக் கொள்கையை கைவிட்டு விட்டது” என்று எலான் மஸ்க் விமர்சித்திருந்தார். அதனை அடுத்து, ஓபன் ஏஐ யின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.