இந்திய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்தார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று கொழும்பு பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கடந்த முன்தினம் இலங்கை வந்தார். இன்று காலை, கொழும்பில் அதிபர் மாளிகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வழிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கையில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த பயணம் முக்கியமானது.














