தேசிய பங்குச் சந்தை, குறிப்பிடத்தக்க பத்திரங்களுக்கான டிக் அளவை ஒரு பைசாவாக குறைத்துள்ளது. முன்னதாக, 250 ரூபாய் அளவுக்கு கீழ் பங்கு மதிப்பு கொண்ட நிறுவனங்களுக்கு 5 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த டிக் அளவு, ஒரு பைசாவாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சில்லறை முதலீட்டாளர்கள் பயன்பெறுவர் என கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை, தேசிய பங்குச்சந்தை டிக் அளவை குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த வருடத்தில், மும்பை பங்குச் சந்தை இதே போன்ற நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது, 100 ரூபாய்க்கு குறைவான பங்கு மதிப்பு கொண்ட நிறுவனங்களுக்கு டிக் அளவு ஒரு பைசாவாக குறைக்கப்பட்டது.