அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிஹந்தில் ஏவுகணை சோதனை

October 15, 2022

நாட்டின் முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் அரிஹந்த்தில் இருந்து நடத்திய ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இந்தியாவில் தயாரான ஐஎன்எஸ் அரிஹந்த், நாட்டின் முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலாகும். மொத்தம் 6 ஆயிரம் டன் எடை கொண்ட இந்த நீர்மூழ்கி கப்பல், 85 மெகாவாட் திறன் கொண்டது. இது நீர் அழுத்த அணு உலைகள் மூலம் இயக்கப்படுகிறது. இந்த நீர்மூழ்கி கப்பலில் இருந்தபடி ஏவுகணைகளை செலுத்தி எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்க […]

நாட்டின் முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் அரிஹந்த்தில் இருந்து நடத்திய ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

இந்தியாவில் தயாரான ஐஎன்எஸ் அரிஹந்த், நாட்டின் முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலாகும். மொத்தம் 6 ஆயிரம் டன் எடை கொண்ட இந்த நீர்மூழ்கி கப்பல், 85 மெகாவாட் திறன் கொண்டது. இது நீர் அழுத்த அணு உலைகள் மூலம் இயக்கப்படுகிறது. இந்த நீர்மூழ்கி கப்பலில் இருந்தபடி ஏவுகணைகளை செலுத்தி எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்க முடியும்.

இதன் பணிகள் கடந்த 2018 ஆண்டு முழுமையடைந்து கடற்படையில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்த அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் இருந்து நேற்று ஏவுகணை சோதனை நடந்தது. வங்காள விரிகுடா கடற்பகுதியில் இந்த சோதனை நடந்தது. அப்போது இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அணுசக்தியில் இயங்கும் நீர்முழ்கி கப்பல்கள் வைத்துள்ள அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் தற்போது இணைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu