கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 25.3% அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது பெண்கள் பொருளாதார சுதந்திரத்தை நோக்கி நகர்ந்து வருவதைக் காட்டுகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த மாற்றம் தெளிவாகத் தெரிகிறது. மிசோரம் போன்ற வடகிழக்கு மாநிலங்கள் மிக அதிகமான வளர்ச்சியைக் காட்டியுள்ளன. மேலும், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களிலும் பெண்களின் வருமான வரி தாக்கல் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களும் 20%க்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.