சென்னையில் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட நர்சுகள் திடீரென டி.எம்.எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் சென்னையில் உள்ள டி.எம்.எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒப்பந்த அடிப்படையில் எட்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்ஸ்கள் அதிகாலை 5 மணிக்கு வளாகத்திற்குள் புகுந்தனர். இதனால் அண்ணா சாலையில் பரபரப்பு ஏற்பட்டு ஏராளமான போலீசர்கள் குவிக்கப்பட்டனர். போராட்டத்தை கை விட கூறி அவர்கள் மறுத்ததை அடுத்து பெண் போலீசார் துணையுடன் நர்சுகள் கைது செய்யப்பட்டனர்.