அழகு சாதன பொருட்கள் விற்கும் நைக்கா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அரவிந்த் அகர்வால் ராஜினாமா செய்துள்ளதாக நைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. பங்குச் சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், நவம்பர் 25 ஆம் தேதியுடன் அவர் பணியில் இருந்து நிறைவு பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பொருளாதாரத் துறையில் உள்ள பல்வேறு வாய்ப்புகளுக்காக அவர் பணியில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைக்கா நிறுவனத்தின் தலைவர் பால்குனி நாயர், அரவிந்த் அகர்வாலின் பணிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். புதிய நிதி அதிகாரியை நியமிப்பதில் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், இந்த நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. சமீபத்திய நிலவரப்படி, நைக்கா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 4.55% சரிந்து, 175.20 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. எனவே, இக்கட்டான சூழலில் நிதி அதிகாரியின் ராஜினாமா ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.