அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்றவியல் விசாரணை தொடங்க நியூயார்க் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப 2016 அதிபர் தேர்தலுக்கு முன்னர் தன்னைப் பற்றிய ரகசியங்களை மறைப்பதற்காக நடிகைக்கு 1.3 லட்சம் டாலர் பணம் அளித்த விவகாரத்தில் அவருக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றம் குற்றவியல் விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த பண பரிமாற்றத்தை மறைப்பதற்காக பல்வேறு நிறுவன கணக்குகளில் அவர் முறைகேடு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
டிரம்பிற்கு எதிராக மொத்தம் நான்கு குற்றவியல் வழக்குகள் உள்ளன. அவர் மீது 34 குற்றச்சாட்டுகள் உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் நோக்கத்துடன் தன் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்ற அவர் கூறுகிறார். அதோடு அவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறார். ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் நான்காண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக ட்ரம்ப் எதுவும் பேசக்கூடாது என்று நியூயார்க் நீதிபதி ஹுவான் மிர்ச்சன் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் அதிபராக இருந்த ஒருவர் மீது இவ்வாறு குற்றவியல் விசாரணை நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.