அதானி குழுமம் மீது மற்றொரு நிதி மோசடியை OCCRP அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியான பிறகு, பங்குச் சந்தையில், அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
அதானி குழுமம், தனது சொந்த நிறுவன பங்குகளை ரகசியமாக வாங்கி, பிறகு பங்குச் சந்தையில் டாலர்களில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கார்டியன் மற்றும் பைனான்சியல் டைம்ஸ் -ல் வெளியாகியுள்ள OCCRP அறிக்கையில் இந்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, கடந்த 2013 முதல் 2018 வரை, மொரீசியசில் நடந்த பரிவர்த்தனைகள் இந்த அறிக்கையில் சர்ச்சைக்குரியதாக குறிப்பிடப்பட்டுள்ளன. நசீர் அலி ஷபன் அஹ்லி மற்றும் சாங் சுங்-லிங் ஆகிய 2 முதலீட்டாளர்கள் இந்த பரிவர்த்தனையில் பங்கேற்றுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளியானதை தொடர்ந்து, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 10 அதானி குழும நிறுவனங்களும் சரிவை சந்தித்து வருகின்றன. அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 1084668.73 கோடியில் இருந்து 1049044.72 கோடியாக சரிந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.