காலநிலை மாற்றத்தால் ஆரல் என்ற கடல் பகுதி காணாமல் போய் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கசகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஆரல் என்று அழைக்கப்படும் கடல் பகுதி அமைந்துள்ளது. மொத்தம் 68000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், உலகின் 4வது பெரிய கடலாக இது அறியப்படுகிறது. கடந்த 1960 களில் கொண்டுவரப்பட்ட சோவியத் நீர்ப்பாசன திட்டங்களால், இந்த கடலுக்கு வந்து சேரும் ஆற்று நீர் திசை திருப்பப்பட்டது. அதன்படி, 2010 ஆம் ஆண்டு, இந்த கடலின் பெரும்பகுதி வறண்டு போனது. இது குறித்த விரிவான ஆராய்ச்சியில், ஆற்று நீர் திசை திருப்பப்பட்டதாலும்,காலநிலை மாற்றத்தாலும், கடல் நீர் முழுவதும் ஆவியாகி வறண்டு போனதாக தெரிய வந்துள்ளது. இது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.