இந்திய ஹாக்கி அணிக்கு 2036 ஆம் ஆண்டு வரை ஸ்பான்சர்ஷிப் அளிக்க இருப்பதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
ஒடிசா மாநில அரசு 2018 ஆம் ஆண்டில் இருந்து இந்திய ஹாக்கி அணிக்கு ஸ்பான்சர் வழங்கி வருகிறது. சமீபத்தில் புவனேஸ்வர் மற்றும் கலிங்கா ஸ்டேடியத்தில் உலககோப்பை ஹாக்கி, ப்ரோ ஹாக்கி தொடர்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த நிலையில் தங்களது ஸ்பான்சர்ஷிப்பை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீடிக்க இருப்பதாக ஒடிசா அரசு தெரிந்திருந்தது. அதாவது 2023லிருந்து 2033 ஆம் ஆண்டு வரை இந்திய ஆண்கள் பெண்கள் ஹாக்கி அணிகளுக்கு வழங்கும் ஸ்பான்சர்ஷிப்பை நீட்டிப்பதாக முடிவு செய்யப்பட்டது. தற்போது மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்து 2036 ஆம் ஆண்டு வரை ஸ்பான்சர்ஷிப் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தம் முதல் மந்திரி மோகன் சரண் மாஜி மற்றும் ஹாக்கி இந்தியா குழுவினர் முன்னிலையில் கையெழுத்தாகியது