தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் மா சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் கிரில் சிக்கன் சாப்பிட்ட மாணவி பலியானார். அத்துடன் 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். உணவகங்களின் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா, ப்ரீசர் பெட்டிகள் உள்ளதா, தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மற்றும் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படாத உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.