சர்வதேச விலை உயர்வை ஒப்பிடுகையில் இந்தியாவில் எண்ணெய் விலை உயர்வு குறைவு - ஹர்தீப் சிங் பூரி

October 8, 2022

இந்தியாவின் மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தொழில்முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவர், அமெரிக்காவின் எரிசக்தி துறை செயலாளர் ஜெனிபர் கிரான்ஹோம் மற்றும் பிற உயர் அதிகாரிகளை வியாழன் அன்று வாஷிங்டனில் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து, உலக வங்கியின் மூத்த அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாட உள்ளார் என்று கூறப்பட்டது. அத்துடன் வெள்ளை மாளிகையைச் சேர்ந்த மூத்த பிரதிநிதிகள் உடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், சனிக்கிழமை அன்று […]

இந்தியாவின் மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தொழில்முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவர், அமெரிக்காவின் எரிசக்தி துறை செயலாளர் ஜெனிபர் கிரான்ஹோம் மற்றும் பிற உயர் அதிகாரிகளை வியாழன் அன்று வாஷிங்டனில் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து, உலக வங்கியின் மூத்த அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாட உள்ளார் என்று கூறப்பட்டது. அத்துடன் வெள்ளை மாளிகையைச் சேர்ந்த மூத்த பிரதிநிதிகள் உடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், சனிக்கிழமை அன்று ஹூஸ்டனைச் சேர்ந்த எரிசக்தி துறை சார்ந்த தொழிலதிபர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாஷிங்டனில், அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஒபெக் கூட்டமைப்பு நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்திருந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "இந்தியா இந்த சூழலை தன்னம்பிக்கையுடன் கடந்து செல்லும். எண்ணெய் இறக்குமதியை பொறுத்தவரை இந்தியா மிகப்பெரிய நாடாகும். இந்தியாவின் எரிசக்தி தேவை உலகின் சராசரி எரிசக்தி தேவையில் மூன்றில் ஒரு பங்காகும். மேலும், இந்தியாவின் எண்ணெய் ஏற்றுமதி கொள்கையில் வேறு யாரும் தலையிட முடியாது. எரிசக்தி பாதுகாப்பு, எரிபொருள் வாங்கும் சக்தி ஆகியவற்றின் அடிப்படையில், எங்கிருந்து எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அரசு தீர்மானிக்கும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை பொறுத்தவரை, இந்தியா மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் குறைந்த அளவே விலைகளை உயர்த்தியுள்ளது. வட அமெரிக்காவில் 43 முதல் 46 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் 2% மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது. எரிவாயுவை பொறுத்தவரை சர்வதேச இலக்குகள் 260 முதல் 280 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் 70 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது" என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu