சுமார் 50,000 ஆண்டுகள் பழமையான நியாண்டர்தால் மனிதர்களின் எலும்பு கூடுகளில் வைரஸ்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நியாண்டர் மக்கள் எப்படி அழிந்தார்கள் என்பது குறித்த ஆராய்ச்சியில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
அண்மையில் அழிந்துபோன மனித இனமாக நியாண்டர்தால் அறியப்படுகிறது. ஆனால், இவர்கள் எவ்வாறு அழிந்தார்கள் என்பது பற்றி எந்த குறிப்புகளும் கிடைக்கவில்லை. இந்த சூழலில், அவர்களின் எலும்புகளில் தற்காலத்திலும் காணப்படும் அடினோ வைரஸ், ஹெர்ப்ஸ் வைரஸ், பாப்பிலோமா வைரஸ் போன்ற வைரஸ் வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அவர்கள் பற்றிய குறிப்புகளில் விடுபட்ட புள்ளிகளை இணைப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால், இது குறித்த திடமான முடிவுக்கு வருவதற்கு முன், தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறுகிறார்கள்.