ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயங்க வேண்டும்- அரசு அறிவிப்பு

January 24, 2024

இன்று முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. சென்னையில் இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயங்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை திட்டமிட்டமாக தெரிவித்துள்ளது. இன்று முதல் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்க வேண்டும் என போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது. ஆனால் கோயம்பேட்டில் இருந்து தான் இயக்க முடியும் என ஆம்னி பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆம்னி […]

இன்று முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
சென்னையில் இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயங்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை திட்டமிட்டமாக தெரிவித்துள்ளது. இன்று முதல் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்க வேண்டும் என போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது. ஆனால் கோயம்பேட்டில் இருந்து தான் இயக்க முடியும் என ஆம்னி பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் கூறும்பொழுது தைப்பூசம் உள்ளிட்ட விடுமுறைகளை தொடர்ந்து 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில் இடத்தை மாற்ற இயலாது. திடீரென கோயம்பேட்டில் இயக்க கூடாது என்றால் என்ன செய்ய முடியும். அறிவித்த இரண்டு நாட்களுக்குள் கிளாம்பாக்கம் நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்குவது இயலாத காரியம். மேலும் கிளாம்பாக்கத்தில் 144 பேருந்துகளை நிறுத்த மட்டுமே இடம் உள்ளது. 1400 ஆம்னி பேருந்து நிறுத்துவதற்கான வசதிகள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu