ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம் போல் இயங்கும் என்று உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலவிவரும் மாண்டஸ் புயல் புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவு அல்லது அதிகாலை கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆம்னி பேருந்து இன்று இரவு வழக்கம் போல் இயங்கும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளனர்.
ஆம்னி பேருந்துகள் இயங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று இதுவரை அரசிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் ஆம்னி பேருந்துகள் அனைத்து வழித்தடங்களில் வழக்கம் போல் இயங்கும் என்றும் கூறியுள்ளார்.