15, 16-ந் தேதிகளில் 4 மாவட்ட வளர்ச்சிப்பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்கிறார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று, அனைத்து துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய, 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். அதன்படி சேலம் மண்டலத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறும் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வருகிறார்.
சேலம் மாவட்டத்தில் நடக்கும் இக்கூட்டத்தில், 4 மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார். இக்கூட்டத்தில் விவாதிக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த 2021-22-ம் ஆண்டு மற்றும் நடப்பு 2022-23-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், நிதி ஒதுக்கீடு குறித்து விவரங்கள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.