25-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் வருகிற 25-ந் தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வரும் 25-ந் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு பிறகு ஈரோட்டில் தங்கியிருக்கும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பணிக்காக வந்திருக்கும் அனைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
அன்று மாலை 5 மணிக்கு மேல் அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஈரோட்டில் உள்ள அனைத்து விடுதிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்துவார்கள். அப்போது யாரேனும் தங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.