மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்காக அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி ஜனவரி 15ஆம் தேதி தொடங்குகிறது.
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதை தொடர்ந்து 2-வது கட்டமாக ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் 118.9 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. வரை 4-வது வழிப்பாதையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த பகுதியிலான மெட்ரோ ரயில் பாதை அடையாறு ஆற்றின் கீழே சுரங்கம் மூலமாக பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சுரங்கம் தோண்டும் எந்திரங்களை பொருத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், அடுத்தாண்டு ஜனவரி 15-ம் தேதி சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.