மாதம் ஒரு முறை மின் கணக்கீடு விரைவில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து ஈரோட்டில் நேற்று பல பகுதிகளில் ஓட்டு சேகரித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிப்படி மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும். முதல்வர் அதை விரைவில் நிறைவேற்றுவார். தற்போது, 'ஸ்மார்ட் மீட்டர்' அமைப்பதற்காக டெண்டர் விடும் பணி நடக்கிறது. சில வழிகாட்டுதலுடன் மாதாந்திர மின் கட்டண முறை அமல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.