ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்: இன்று பாராளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம்

January 8, 2025

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட மசோதாவை மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கிய பின் பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான மசோதா கடந்த மாதம் மத்திய மந்திரி சபையின் ஒப்புதலுடன் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதால், எதிர்க்கட்சிகள் இந்த மசோதா தேர்தல் நடைமுறையை சீர்குலைக்கும், ஜனாதிபதி ஆட்சிக்கு வழிவகுக்கும் மற்றும் மாநிலங்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாக எதிர்ப்பு தெரிவித்தன. அதேபோல், […]

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட மசோதாவை மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கிய பின் பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்டது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான மசோதா கடந்த மாதம் மத்திய மந்திரி சபையின் ஒப்புதலுடன் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதால், எதிர்க்கட்சிகள் இந்த மசோதா தேர்தல் நடைமுறையை சீர்குலைக்கும், ஜனாதிபதி ஆட்சிக்கு வழிவகுக்கும் மற்றும் மாநிலங்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாக எதிர்ப்பு தெரிவித்தன. அதேபோல், மக்களவையின் ஒப்புதலுடன் இந்த மசோதா பாராளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இன்று, 31 பேர் கொண்ட பாராளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் நடைபெறுகிறது. பா.ஜ.க. எம்.பி. பி.பி. சவுத்ரி இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் 21 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சக அதிகாரிகள் கூட இந்த கூட்டத்தில் பங்குபெற்று, மசோதாவில் முன்மொழியப்பட்ட விதிகள் பற்றி விளக்கம் அளிப்பார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu