கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் ஒரு நாள் தூதராக உயர் அதிகாரி போட்டியை நடத்தி வருகிறது.
ஆண்டுதோறும் சர்வதேச பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு ஒரு நாள் தூதராக உயர் அதிகாரி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான போட்டியில் சென்னையை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஸ்ரேயா தர்மராஜன் ஒருநாள் தூதராக உயர் அதிகாரியாக ஆகி உள்ளார். இந்த போட்டியின் மூலம் இவர் ஒரு நாள் தூதரக உயர் அதிகாரியாகும் ஏழாவது பெண் ஆவார். இவர் டெல்லியில் உள்ள கல்லூரியில் அரசியல் அறிவியலில் இளங்கலை பெற்றுள்ளார். தற்போது மும்பையில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.














