சென்னை மெட்ரோவில் இனி 100 ரூபாய் கட்டணத்தில் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்யலாம்.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இங்கு பயணிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது மெட்ரோ ரயில் புதிய ஒரு நாள் சுற்றுலா அட்டை என்னும் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஒரு நாள் முழுவதும் 100 ரூபாய்க்கு பயணம் செய்யலாம். இதன் விலை ரூபாய் 150 ஆகும் மீதமுள்ள 50 ரூபாய் பயண அட்டையில் வைப்பு தொகையாக வரவு வைக்கப்படும். இந்த அட்டையின் கால அவகாசம் ஒரு நாள் மட்டுமே ஆகும். பயணம் முடிந்து சுற்றுலா அட்டையை ஒப்படைக்கும் பொழுது ரூபாய் 50 தொகை திருப்பித் தரப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.














