சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் குலுங்கியதால் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர்.
லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலை காரணமாக நடுவானில் குலுங்கியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக அந்த நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் போயிங் 777 எஸ் கியூ 321 என்ற விமானத்தில் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். இந்த விமானம் லண்டனில் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் மோசமான வானிலை காரணமாக நிலை தடுமாறியது. அதையடுத்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் ஸ்வர்ணபூமி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களுக்கு உதவு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்புகிறது.













