தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் ஊகான் மாநிலத்தில் இருந்து கொரோனா தொற்று பரவியது. இது உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் தமிழ்நாட்டில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து தடுப்பூசிகள், மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது. தற்போது
உரு மாறிய புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது கேரளாவில் உருமாறி வேகமாக பரவத் தொடங்கியது. கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது வரை கொரோனாவினால் எந்த வித உயிர் இழப்பும் ஏற்படாமல் இருந்த நிலையில் நேற்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 55 வயது பெண் உயிர் இழந்தார். இதுவரை தமிழகத்தில் 158 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.