சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக தங்கி இருக்கும் விண்வெளி வீரர்கள் பூமி திரும்ப உள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த நாசா விஞ்ஞானி பிராங்க் ரூபியோ, கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து வரலாறு படைத்துள்ளார். அவர் இன்று பூமி திரும்ப உள்ளார். அவருடன் இணைந்து ரஷ்யாவை சேர்ந்த சேர்கே ப்ரோக்கோப்யேவ் மற்றும் டிமிட்ரி பீட்டலின் ஆகியோரும் பூமி திரும்ப உள்ளனர். ரஷ்ய விண்வெளி மையமான ரோஸ்காஸ்மோஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சர்வதேச நேரப்படி இன்று காலை 7:17 க்கு அவர்கள் கசகஸ்தான் நாட்டில் தரை இறங்குவர். அவர்களின் தரையிறக்கம் நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது.