இந்தியாவில், விண்வெளியில் இருந்து பிராட்பேண்ட் சேவையை வழங்கும் முதல் நிறுவனமாக ஒன் வெப் மாற உள்ளது. பார்தி குழுமத்தை சேர்ந்த ஒன் வெப் நிறுவனம், வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவில் பிராட்பேண்ட் சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், இதற்கான ஒப்புதல்கள் தொலைத்தொடர்பு துறை அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக ஒன் வெப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒன் வெப் நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவைக்காக, 2 சாட்டிலைட் கேட்வேக்கள் அமைக்கப்பட உள்ளன. குஜராத் மாநிலம் மேசானா மற்றும் தமிழ்நாட்டு மாநிலம் சென்னை ஆகிய இடங்களில் இந்த கேட்வேக்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. Ka மற்றும் ku ஸ்பெக்ட்ரம் பேண்ட்டுகளை ஒன் வெப் பயன்படுத்தும் என கூறப்படுகிறது.