இணைய வழியில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் வசதியை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் இணைய வழி நீதிமன்றங்களும், இணைய வழியில் வழக்கு தொடரும் வசதியும் ஏற்படுத்தப்பட வேண்டும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுகுறித்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், உச்சநீதிமன்றத்தில் 24 மணி நேரமும் இணைய வழியில் வழக்கு தொடரும் வசதியை தொடங்கியுள்ளோம். இணைய வசதிகள் இல்லாத மற்றும் தொழில்நுட்பம் பற்றி அறியாத வழக்கறிஞர்களுக்கு உதவிட இரண்டு சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அனைத்து வழக்கறிஞர்களும் புதிய வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இ-ஃபைலிங் மென்பொருள் மூலம் நாட்டின் எந்தவொரு நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தில் உள்ள வழக்கின் நிலையை அறியலாம் என்று தெரிவித்துள்ளார்.