செல்லப்பிராணிகளை இணையதளத்தில் பதிவு செய்யும் திட்டம்

December 17, 2022

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை இணையதளத்தில் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளது. சென்னையில் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் வீடுகளில் எத்தனை உள்ளன என்ற முறையான புள்ளி விவரம் இல்லாததால் அவற்றை ஒழுங்குபடுத்த புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என்று மாநகராட்சி கால்நடை டாக்டர் கமால் உசேன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த புதிய திட்டம் ஜனவரி மாதம் 2வது வாரத்தில் செயல்படுத்தப்படும். சென்னை மாநகராட்சி சார்பில் செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக சிகிச்சை, வெறிநாய் […]

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை இணையதளத்தில் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளது.

சென்னையில் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் வீடுகளில் எத்தனை உள்ளன என்ற முறையான புள்ளி விவரம் இல்லாததால் அவற்றை ஒழுங்குபடுத்த புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என்று மாநகராட்சி கால்நடை டாக்டர் கமால் உசேன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த புதிய திட்டம் ஜனவரி மாதம் 2வது வாரத்தில் செயல்படுத்தப்படும். சென்னை மாநகராட்சி சார்பில் செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக சிகிச்சை, வெறிநாய் தடுப்பூசி போன்றவை போடப்படுகிறது. திரு.வி.க. நகர், நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் ஆகிய 4 இடங்களில் இதற்கான மருத்துவமனை உள்ளது.

நாய் வளர்ப்போரின் பெயர், அடையாள அட்டை, நாய் போட்டோ, தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் போன்றவற்றை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன்மூலம் செல்லப்பிராணிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து உரிமம் வழங்கப்படும் என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu