தென்மேற்கு பருவமழை வழக்கமான அளவை விட இந்த முறை எட்டு சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.தென்மேற்கு பருவ மழை இன்றுடன் நிறைவடைகிறது.தென்மேற்கு பருவமழை காலத்தில் 354 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கமான அளவை விட 8 சதவீதம் அதிகமாக உள்ளது. மேலும் சென்னையில் இயல்பை விட 74% அதிகமாக மழை பெய்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த 3 தினங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு நிலையால் இந்த பருவமழை தொடக்கத்தில் சற்று வலுவிழந்து காணப்படும். என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.