ஓபன் ஏஐ நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள புதிய AI மாடலான ஓரியன், இதுவரை வெளியிடப்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த AI மாடலான GPT-4 ஐ விட நூறு மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய AI மாடல், செயற்கை நுண்ணறிவு துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் டிசம்பரில் இது வெளியாக உள்ளது.
இந்த புதிய AI மாடலை முதலில் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு, OpenAI நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பொது மக்கள் இந்த AI மாடலைப் பயன்படுத்திக் கொள்ள சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் Azure கிளவுட் சேவையில், இந்த மாத இறுதியில் இருந்து இந்த AI மாடலைப் பயன்படுத்திக்கொள்ளும் வசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Orion மாடல், செயற்கை பொது நுண்ணறிவு (AGI) என்ற இலக்கை நோக்கி OpenAI நிறுவனம் எடுத்து வைத்துள்ள முக்கியமான ஒரு படியாகும். இந்த மாடல் மூலம், இயந்திரங்கள் மனிதர்களைப் போலவே சிந்திக்கவும், கற்றுக்கொள்ளவும் முடியும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.