செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னோடியாக உள்ள ஓபன் ஏஐ நிறுவனம் வாய்ஸ் அசிஸ்டன்ட் வர்த்தகத்தில் களமிறங்குகிறது. அதன்படி, ஒருவரின் குரலை அப்படியே பிரதிபடுத்தும் கருவியாக ஓபன் ஏஐ நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டன்ட் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இதனை உடனடியாக வெளியிட போவதில்லை என ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை, ஓபன் ஏஐ நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டன்ட் தொழில்நுட்பம் வெளியிடப்பட்டது. இந்த கருவியில் 15 வினாடிகள் ஓடக்கூடிய ஒருவரின் குரல் ஒலியை கொடுத்தால், அதை அப்படியே பிரதிபடுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், ஒருவரின் குரலை பொய்யான தகவல்களைக் கொண்டு வெளியிடுவது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்த தொழில்நுட்பத்தை உடனடியாக வெளியிடப் போவதில்லை என ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.