மதுரை அலங்காநல்லூரில் கீழக்கரை கிராமத்தில் புதிய ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இது சுமார் 64 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை காண 200-க்கும் மேற்பட்ட மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களிக்கும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகள் செய்துள்ளது. மதுரையில் நடைபெறும் போட்டிகளை மாற்றுத்திறனாளிகள் முதல் முறையில் பார்ப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளனர்.














