ரூ.1,859 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் ரூ.1,859 கோடியே 12 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார். மேலும் ரூ.143 கோடியே 88 லட்சம் செலவில் 65 துணை மின் நிலையங்களில் 853 எம்.வி.ஏ. அளவுக்கு திறன் மேம்படுத்தப்பட்ட 67 மின் மாற்றிகளின் செயல்பாட்டினையும் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் தொழிற்துறை, விவசாயம், வணிகம், தகவல் தொழில்நுட்ப மையங்கள், மெட்ரோ ரெயில் திட்டங்கள், மின்சார வாகன மின்னூட்ட நிலையங்கள் ஆகியவற்றினை கருத்தில் கொண்டு வளர்ச்சிக்கு தேவையான மின்சாரத்தை தடையில்லாமல் வழங்கிடும் வகையில் புதிய துணைமின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.