பக்தர்கள் வசதிக்காக திருப்பதி விமான நிலையத்தில் மீண்டும் ஸ்ரீ வாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் கவுண்டர் செயல்பட தொடங்கியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு விமானத்தில் வந்து செல்லும் பக்தர்கள் தாங்கள் வந்த விமானத்தில் வந்ததற்கான ஆவணங்களை சமர்ப்பித்து தேவஸ்தானத்தில் ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு ரூபாய் பத்தாயிரம் நன்கொடை மற்றும் ரூபாய் 500 கட்டணம் செலுத்தி விஐபி பிரேக் தரிசன டிக்கெட் பெற்று சாமி தரிசனம் செய்து வந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த கவுண்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் பக்தர்கள் வசதிக்காக திருப்பதி விமான நிலையத்தில் மீண்டும் ஸ்ரீ வாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் செயல்பட தொடங்கியுள்ளது.