சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.35.79 கோடி செலவில் செய்து முடிக்கப்பட்ட பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னையின் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் புதிய சாலை பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் உள்ள பள்ளிகள், பூங்காக்கள் ஆகியவை சீரமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி 7 பள்ளிகள் புதுப்பிக்கும் பணிகள், 19 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணிகள், ஒரு பூங்கா மறுசீரமைக்கும் பணி, 5 புதிய விளையாட்டு திடல்கள் அமைக்கும் பணிகள், 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்கள் கட்டும் பணிகள் என ரூ.35.79 கோடி செலவில் செய்து முடிக்கப்பட்ட பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.