அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் மக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் டெங்கு சிகிச்சைக்கான தனி சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக பொன்னேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மர்ம காய்ச்சலினால் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சிறியவர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகச்சைக்காக வருகின்றனர். பெரும்பாலானோருக்கு சளி இருமலுடன் காய்ச்சல், உடலில் வலி இருக்கின்றது.தினமும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதே போல் தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. காய்ச்சல் பாதுகாப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து 150 படுக்கை வசதியில் 20 படுக்கைகளுடன் டெங்கு காய்ச்சல் வார்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதார நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு வருகின்றன.