தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் அறிவிக்கப்பட்டு முன்பதிவு டிக்கெட் முழுமையாக விற்று தீர்ந்துள்ள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தென்னிந்தியாவிற்கு 36 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை, நெல்லை, நாகர்கோவில், கோவை, மங்களூர் ,பெங்களூர், கொச்சுவேலி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.