மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் - எதிர்க்கட்சிகள் திட்டம்

மணிப்பூர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி, எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக, பாஜகவுக்கு எதிரான ‘இந்தியா’ கூட்டணி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அறையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அதில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் […]

மணிப்பூர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி, எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக, பாஜகவுக்கு எதிரான ‘இந்தியா’ கூட்டணி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அறையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அதில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்கும் வரையில், போராட்டத்தை கைவிடாமல் தொடர திட்டமிடப்பட்டுள்ளது. அதே வேளையில், நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், மக்களவையில் 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ள பாஜக மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் வெற்றி வாய்ப்பு குறைவாகவே பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu