வெப்ப அலை வீசுவதால் தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட தமிழக, உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர்,கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, கரூர்,திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 12ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திர கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது