நீலகிரி மற்றும் கோவை ஆகிய மலைப்பகுதிகளில் உள்ள இடங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளனர்.
தென்னிந்திய பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடக்கு
சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருரி இடங்களும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 25ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை, திருப்பூர், திண்டுக்கல் ,தேனி ஆகிய மாவட்டங்களிலும், அடுத்ததாக 23ஆம் தேதி திருப்பூர், திண்டுக்கல் ,தேனி, ஈரோடு, சேலம், தர்மபுரி, ஆகிய மாவட்டங்களிலும் கனமழைவாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 22, 23ஆம் தேதிகள் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது