தமிழகம் மற்றும் புதுவைக்கு ஆரஞ்சு அலர்ட்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று வட தமிழகத்திற்கு ஆந்திர கடலோர பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை மத்திய வங்க கடல் பகுதியில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.மேலும் இது மே 26 ஆம் தேதி புயலாக உருவெடுக்க உள்ளது. இதேபோல தெற்கு கேரளா மற்றும் அதனை […]

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று வட தமிழகத்திற்கு ஆந்திர கடலோர பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை மத்திய வங்க கடல் பகுதியில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.மேலும் இது மே 26 ஆம் தேதி புயலாக உருவெடுக்க உள்ளது. இதேபோல தெற்கு கேரளா மற்றும் அதனை ஓட்டிய பகுதிகள் மீதும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுகிறது. இதன் காரணமாக 28ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் புயல் உருவானாலும் அது வடக்கு நோக்கி நகர நகர தமிழகத்தில் வெப்பநிலை உயரும். அதாவது மே 26 ஆம் தேதி வரை தமிழகம் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையை விட மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு இடங்களில் கன முதல் மிக கனமழைவாய்ப்பு இருப்பதால் சென்னை வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu