கடந்த ஏப்ரல் மாதத்தில் துபாயில் வரலாறு காணாத மழை பெய்தது. அப்போது, துபாய் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்தது. விமான சேவைகள், உள்நாட்டு போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து விதமான நடவடிக்கைகளும் முடங்கின. இந்த சூழலில், நேற்று முதல் துபாயில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
சர்வதேச விமான போக்குவரத்தில் துபாய் விமான நிலையம் முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த சூழலில் துபாயில் பெய்து வரும் கனமழையால், சர்வதேச விமான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மே 2 அன்று கிளம்பும் பல்வேறு விமானங்களின் புறப்படும் நேரம் தாமதம் செய்யப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.