நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவர் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையினரால் கடந்த ஜனவரி 31ம் தேதி கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையில் ஹேமந்த் சோரன் ஜாமீனுக்காக புதிய மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில் ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது