செந்தில் பாலாஜி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வழங்குவதாக மோசடி செய்ததன் வழக்கை ஓராண்டுக்குள் முடிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க உத்தரவு வழங்கப்பட்டது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் அடுத்த விசாரணைக்குள் அந்த வழக்குகளைப் பற்றிய அறிக்கையை வழங்க வேண்டும் எனவும், விசாரணை அக்டோபர் 25க்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.