நீலகிரியில் யானை வழித்தடம் மீதான 35 தங்கும் விடுதிகள் இடிக்க உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடம் மறிக்கப்பட்டு தனியார் தங்கும் விடுதிகள் கட்டப்படுவதற்கு எதிராக 2008-ம் ஆண்டு சென்னையிலிருந்து யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். 2011-ல் ஐகோர்ட்டு, 38 விடுதிகள் காலி செய்ய உத்தரவிட்டது. அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது, 2018-ல் சுப்ரீம் கோர்ட்டு 'சீல்' வைக்க உத்தரவிட்டது. ஆனால், தவறான தகவல்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. விசாரணை குழு, கடந்த ஆண்டு தங்கும் விடுதிகளை இடிக்க உத்தரவிட்டது. தற்போது, நீலகிரி மாவட்ட நிர்வாகம் 15 நாட்களில் 35 விடுதிகளை அகற்றும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.