காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 பட்டாசு ஆலைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அருகே குருவிமலை அடுத்த வளத்தோட்டம் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 18 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறை அதிகாரி சிவருத்ரய்யா கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டம் மேல்ஒட்டிவாக்கம், மாகரல், உத்திரமேரூர் வட்டத்தில் விசூர் போன்ற பகுதிகளில் 3 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இதில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பட்டாசுகள் உற்பத்தியை நிறுத்தி வைக்கவும், தற்காலிகமாக மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.