விமான பயணத்தின் போது 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அருகிலேயே இருக்கை ஒதுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது
விமான பயணத்தின் பொது குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஒருசேர அமர இயலாமல் போவதாக பயணிகள் பலர் புகார் எழுப்பி வந்தனர். இந்நிலையில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர் அருகிலேயே இருக்கை ஒதுக்க வேண்டும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. தனது முந்தைய பரிந்துரைகளில் திருத்தம் செய்து ஒழுங்குமுறை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.