'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது

March 13, 2023

யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்த 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகளை வனத்துறையினர் மீட்டு முகாமுக்கு கொண்டு வருகின்றனர். இதில் கடந்த 2017-ம் ஆண்டில் ரகு, 2019-ம் ஆண்டில் பொம்மி குட்டி யானைகள் முகாமுக்கு வந்தன. இதை பழங்குடியினத்தை சேர்ந்த பொம்மன், அவரது மனைவி பெள்ளி ஆகியோர் பராமரித்து […]

யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்த 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகளை வனத்துறையினர் மீட்டு முகாமுக்கு கொண்டு வருகின்றனர். இதில் கடந்த 2017-ம் ஆண்டில் ரகு, 2019-ம் ஆண்டில் பொம்மி குட்டி யானைகள் முகாமுக்கு வந்தன. இதை பழங்குடியினத்தை சேர்ந்த பொம்மன், அவரது மனைவி பெள்ளி ஆகியோர் பராமரித்து வந்தனர். இதை மையமாக வைத்து ஊட்டியை சேர்ந்த பெண் இயக்குனர் கடந்த 2019-ம் ஆண்டு தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை உருவாக்கினார்.

இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' (The Elephant Whisperers)  விருதை வென்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu