புனேவில் பரவி வரும் நோயால் சுகாதாரத்துறை பரிசோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவின் புனே மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் குய்லின்-பாரே சிண்ட்ரோம் என்ற நரம்பியல் கோளாறு பரவிவருகிறது. இந்த நோய் மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளை தாக்கும். 73 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 14 பேருக்கு செயற்கை சுவாசத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நோயின் அறிகுறிகளாக கை, கால்கள் மரத்துப் போதல், நீடித்த வயிற்றுப்போக்கு ஆகியவை உள்ளன. நோய் பாதிப்பு 4 நாட்களில் மூன்றாம் நிலைக்கு உயர்ந்துள்ளது, இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.